இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மின்சாரம், குடிநீர் கட்டணங்களை செலுத்தாத கட்சிகளுக்கு தேர்தலில் தடை

மின்சாரம், குடிநீர், தொலைபேசி உள்ளிட்ட கட்டணங்களைச் செலுத்தாத கட்சிகள் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தத் தடை விதிப்பது குறித்து தேர்தல் ஆணையம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

News image
Updated On :27 மார்ச் 2017, 5:19 am

தினமணி

மின்சாரம், குடிநீர், தொலைபேசி உள்ளிட்ட கட்டணங்களைச் செலுத்தாத கட்சிகள் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தத் தடை விதிப்பது குறித்து தேர்தல் ஆணையம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
ஏற்கெனவே, மின்சாரம், குடிநீர் போன்ற அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை முழுமையாகச் செலுத்தியதற்கான ஆவணங்களை மக்களவை, சட்டப் பேரவைத் தேர்தல் வேட்புமனுவின்போது வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகளுக்கும் இதேபோன்ற விதிமுறையைக் கொண்டுவர தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.
இது தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் கருத்துகளைக் கேட்டு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. முன்னதாக தில்லி உயர் நீதிமன்றம் இது தொடர்பாக ஓர் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதில், வேட்பாளர்கள் மட்டுமின்றி தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளும் மின்சாரம், குடிநீர், தொலைபேசி உள்ளிட்ட கட்டணங்களைப் பாக்கி வைக்கவில்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடுவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறியதாவது:
உயர் நீதிமன்றத்தின் உத்தரவைப் பரிசீலித்து அது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, எவ்வித கட்டண பாக்கியும் இல்லை என்ற சான்றிதழை அளிக்க வேண்டும் என்ற விதிமுறையை ஏற்படுத்துவது குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துகளைக் கேட்டுள்ளோம் என்றார் அவர்.
சமீபத்தில் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் சில வேட்பாளர்கள், தாங்கள் எவ்வித கட்டண பாக்கியும் வைக்கவில்லை என்பதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை. எனினும், இந்த ஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை என்று கூறி, அவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க இப்போதைய விதிமுறைகளில் இடமில்லை. எனினும், இது தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டுமென்று மத்திய சட்டத் துறை அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.