மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குஜராத் மாநிலத்தவர் யாரேனும் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்துள்ளனரா? அகிலேஷ் யாதவின் கருத்தால் சர்ச்சை

நாட்டுக்காக குஜராத் மாநிலத்தவர் யாரேனும் தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளனரா? என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வியெழுப்பியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :10 மே 2017, 7:41 pm

DIN

நாட்டுக்காக குஜராத் மாநிலத்தவர் யாரேனும் தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளனரா? என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வியெழுப்பியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அவர் புதன்கிழமை கூறியதாவது:
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், தென்னிந்தியா மற்றும் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த வீரர்கள், நாட்டுக்காக தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளனர். இதுபோல், குஜராத் மாநிலத்தவர் யாரேனும் உயிரைத் தியாகம் செய்துள்ளனரா? என்று தெரிவிக்க முடியுமா?
தேசியவாதம், வந்தே மாதரம், தியாகிகள் பெயரில் அவர்கள் அரசியல் செய்கின்றனர். தேசியவாதத்துக்கு அவர்கள் கொடுக்கும் விளக்கம் என்ன? நம்மை அவர்கள் ஹிந்துக்களாகக் கூட நினைப்பதில்லை என்று அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டார்.
மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையிலேயே இந்த கருத்துகளை அகிலேஷ் யாதவ் வெளியிட்டிருந்தார். அவரது இந்த கருத்துகள் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவரின் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உத்தரப் பிரதேச துணை முதல்வரும், மாநில பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான கேசவ் பிரசாத் மௌரியா கூறியதாவது:
அவரது பேச்சு, அரசியல் ஆகியவற்றை உத்தரப் பிரதேச மக்கள் ஏற்கெனவே நிராகரித்து விட்டனர். இதனால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகத்தான், இதுபோன்ற கருத்துகளை அவர் வெளியிட்டு வருகிறார்.
அகிலேஷ் யாதவ் தேவையில்லாத கருத்துகளை வெளியிட்டுள்ளார். நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்யும் அனைவரையும் இந்தியர்கள் என்ற கண்ணோட்டத்தில்தான் முதலில் பார்க்க வேண்டும் என்றார் மௌரியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.