தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

முத்தலாக் முறையை ரத்து செய்தால் மாற்று சட்டம் கொண்டு வருவோம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்! 

இஸ்லாமிய சமூகத்தில் மணமுறிவுக்கு பயன்படுத்தப்படும் முத்தலாக் நடைமுறையை அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அறிவித்தால்...

News image
Updated On :15 மே 2017, 9:57 am

DIN

புதுதில்லி: இஸ்லாமிய சமூகத்தில் மணமுறிவுக்கு பயன்படுத்தப்படும் முத்தலாக் நடைமுறையை அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அறிவித்தால், அதற்கு மாற்றாக சட்டம் நிறைவேற்றத் தயார் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

திருமண பந்தத்தில் உள்ள இஸ்லாமிய ஆண் வாய்மொழியாக மூன்று முறை 'தலாக்' என்று தெரிவித்தால் மணமுறிவு ஏற்படும் என்ற நடைமுறை இஸ்லாமியர்கள் மத்தியில் பின்பற்றப்படுகிறது. இதனை எதிர்த்து ஷாயரா பானு, ஆப்ரின் ரஹ்மான் உள்ளிட்ட சில இஸ்லாமிய பெண்களும், குரான் சுன்னத் அமைப்பும் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்து வருகிறது. இதுதவிர, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பொதுநல வழக்கு ஒன்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது இந்த வழக்கானது அதன் முக்கியத்துவம் கருதி, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹின்டன் எப்.நாரிமன், யு.யு.லலித் மற்றும் , எஸ்.அப்துல் நசீர் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விடுமுறைகால நீதிமன்ற அமர்வில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய வாதம் இன்று மூன்றாவது நாளாக நடைபெறுகிறது. விசாரணையின் பொழுது,  "தலாக் முறை செல்லாது என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டால் இஸ்லாமிய ஆண்கள் திருமண ரத்திற்கு என்ன வழி?" என்று அமர்வு கேள்வி எழுப்பியது.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி அதற்கு பதிலளித்த பொழுது , "இஸ்லாமிய சமூகத்தில் மணமுறிவுக்கு பயன்படுத்தப்படும் முத்தலாக் நடைமுறையை அரசியல் சாசனத்துக்கு எதிரானது என நீதிமன்றம் அறிவித்தால், அதற்கு மாற்றாக சட்டம் நிறைவேற்ற மத்திய அரசு தயாராக இருக்கிறது. அந்த சட்டமானது இஸ்லாமிய சமூகத்தினரின் திருமணம் மற்றும் விவாகரத்து முறைகளை ஒழுங்குபடுத்தும் வகையில் அமையும்" என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.