அரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை: வழக்கு தொடுப்போம்

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :29 மே 2017, 7:29 pm

DIN

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாடுகளை வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்காக மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் இறைச்சிக்காக அவற்றை விற்கக் கூடாது என்றும் மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது. இதுதொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்த உத்தரவானது நாடு முழுவதும் கடுமையான விமர்சனங்களுக்கு வித்திட்டது. கேரளம் உள்பட பல்வேறு மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. மத்திய அரசின் இந்த முடிவு, தனிமனித உரிமைகளைப் பறிக்கும் செயல் என்றும் விமர்சிக்கப்பட்டது.
மேலும், அதனை எதிர்த்து கேரளத்தில் மாட்டிறைச்சி திருவிழா நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜி, செய்தியாளர்களிடம் கொல்கத்தாவில் திங்கள்கிழமை கூறியதாவது: இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை விதித்திருப்பது மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிக்கும் நடவடிக்கை. இது முழுக்க, முழுக்க ஜனநாயகத்துக்கும், அரசியல் சாசனத்துக்கும் முரணான செயல்பாடு. நாட்டின் கூட்டாட்சி கொள்கையை அழித்தொழிக்கும் முயற்சியாகவே இதைக் கருதத் தோன்றுகிறது. இந்த முடிவை மேற்கு வங்க அரசு ஏற்காது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.
இதுதொடர்பாக மாநில அரசு தலைமை வழக்குரைஞரிடம் ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும். மாநிலங்களின் விவகாரங்களில் தேவையின்றி தலையிடுவதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.