இது குறித்து மனநல மருத்துவரும், ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் பேராசிரியருமான விக்ரம் படேல் கூறுகையில், மரணத்துக்கு அதிகக் காரணமாக தற்கொலைகள் இருப்பதாக இந்த புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால், வளர்ந்து வரும் மருத்துவ சிகிச்சைகளினால் இந்த மாநிலங்களில் குழந்தைகளைத்தாக்கும் மிகப் பயங்கர நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதும், தொற்று நோய்களும் பரவாமல் தடுக்கப்பட்டிருப்பதால், இந்த காரணிகளால் நிகழும் மரணங்கள் குறைந்திருக்கின்றன. இதுவே தற்கொலையால் மரணங்கள் அதிகமாக நிகழ்வதாக புள்ளி விவரம் தெரிவிக்கக் காரணமாகிறது.