சசிகலாவுக்கு அடுத்த நெருக்கடி: சிறையில் வசதிகளைப் பெற லஞ்சம்- விசாரிக்க கர்நாடக அரசு முடிவு?
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும், சசிகலா சிறையில் வசதிகளைப் பெற உயர் அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.









