ஹரியாணா: கார்கில் போர் வீரரின் சிலை சேதம்

ஹரியாணா மாநிலத்தில் கார்கில் போர் வீரரின் சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Updated on
1 min read

ஹரியாணா மாநிலத்தில் கார்கில் போர் வீரரின் சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஹிசார் மாவட்டம், மிலக்பூர் கிராமத்தில், கார்கில் போரில் வீரமரணம் அடைந்த பவித்தர் குமார் என்ற ராணுவ வீரரின் நினைவாக சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை, கடந்த 28-ஆம் தேதி இரவில் மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அந்த வீரரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், உரிய சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அந்த அதிகாரி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com