

தெலங்கானா உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சரியாக இந்த நேரத்தில் பிஆர்எஸ் லெஜிஸ்லேடிவ் ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கும் தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.
உண்மை சில நேரங்களில் கசக்கத்தான் செய்யும் என்பது சினிமா வசனம் என்றாலும் அது உண்மைதான்.
வாருங்கள் அந்த கசப்பான உண்மை என்னவென்று பார்க்கலாம்..
அதாவது இந்தியாவில் உள்ள 26 மாநில சட்டப்பேரவைகளின் பணி நாட்கள் பற்றியதே அந்த ஆய்வு. அதில் கேரளாவும், கர்நாடகாவும் முதல் இடத்தில் உள்ளன. இவ்விரு சட்டப்பேரவைகளும் ஆண்டுக்கு சராசரியாக 45 நாட்கள் பணியாற்றியுள்ளன. இதற்கு அடுத்தபடியாக 45 பணி நாட்களுடன் மகாராஷ்டிரம் 2வது இடத்தில் உள்ளது.
நாகாலாந்து மாநிலம் தான் ஆண்டுக்கு வெறும் 10 நாட்கள் மட்டுமே செயல்பட்டு பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது. தமிழகம் இதில் ஆண்டுக்கு 38 பணி நாட்களுடன் இடம்பெற்றுள்ளது.
இதற்காகத்தான் முதலிலேயே சொல்லியிருந்தோம், வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருக்க விரும்புவோர் இதனைப் படிக்க வேண்டாம் என்று.. இப்போது தேர்தலில் போட்டியிடலாமா? நாகாலாந்து போகலாமா என்றெல்லாம் சிந்திப்பதற்கு நிர்வாகம் பொறுப்பாகாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.