கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஜல்லிக்கட்டு வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்குமாறு உச்ச நீதிமன்றத்தை அணுக பீட்டா அமைப்பு முடிவு  

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்குமாறு, உச்ச  நீதிமன்றத்தை அணுக பீட்டா அமைப்பு திட்டமிட்டுள்ளது. 

News image
Updated On :20 டிசம்பர் 2018, 11:14 am

DIN

புது தில்லி: உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்குமாறு, உச்ச  நீதிமன்றத்தை அணுக பீட்டா அமைப்பு திட்டமிட்டுள்ளது. 

ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பீட்டா அமைப்பு தொடுத்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதேசமயம் தமிழகத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சிறப்புத் தீர்மானத்தின் மூலமும், மத்தியய அரசின் ஒத்துழைப்பாலும் கடந்த ஆண்டு எந்த விதமான சிக்கலும் இல்லாமல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. தற்போதும் இந்த ஆண்டுக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்குமாறு, உச்ச  நீதிமன்றத்தை அணுக பீட்டா அமைப்பு வேண்டுகோள் திட்டமிட்டுள்ளது. 

தற்சமயம் ஆண்டு இறுதி விடுமுறை நாட்கள் துவங்க இருப்பதன் காரணமாக உச்ச நீதிமன்றமானது ஜனவரி 2-ஆம் தேதியன்றுதான் மீண்டும் செயல்படத் துவங்கும். அத்துடன் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் நடைபெறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. 

எனவே ஜல்லிக்கட்டு வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக பீட்டா அமைப்பு  முடிவெடுத்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.