காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆயுதப்படை கிடங்கில் துப்பாக்கி வெடிப்பு: காவலர் பணியிடை நீக்கம்

சேலம் ஆயுதப்படை கிடங்கில் எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்த சம்பவம் தொடர்பாக, காவலர் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 9:25 pm

DIN

சேலம் ஆயுதப்படை கிடங்கில் எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்த சம்பவம் தொடர்பாக, காவலர் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
சேலம் குமாரசாமிபட்டி பகுதியில் மாவட்ட ஆயுதப் படை மைதானம் உள்ளது. இங்கு ஆயுதப் படை அலுவலகமும், காவல் துறையினர் பயன்பாட்டுக்கான அனைத்து வகை துப்பாக்கிகள் பாதுகாக்கும் மையமும் உள்ளன.
இதனிடையே, சேலம் மத்திய சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்படும் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பாகச் செல்லும் ஆயுதப் படை காவலர்கள், தினந்தோறும் இங்கிருந்து தான் துப்பாக்கிகளை எடுத்துச் செல்வது நடைமுறையாக உள்ளது.
இந் நிலையில், சேலம் மத்திய சிறையில் உள்ள சிறைவாசி ஒருவரை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வதற்காக, ஆயுதப் படை காவலர் கேசவராஜ் மற்றும் பெண் காவலர் ஒருவர் திங்கள்கிழமை பணிக்கு அமர்த்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து, ஆயுதக் கிடங்கில் இருந்த பிளாட் ஆக்சன் என்ற ரகத்தைச் சேர்ந்த துப்பாக்கியை காவலர் கேசவராஜ் எடுத்து சரி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென துப்பாக்கியில் இருந்து தோட்டா வெளியேறியது. 
ஆயுதக் கிடங்குக்கு அருகில் உள்ள சுவற்றின் மேல் பகுதியில் தோட்டா பாய்ந்ததில், சுவற்றின் ஒரு பகுதி சேதமடைந்தது. துப்பாக்கி மேல் நோக்கி இருந்ததால், அருகில் இருந்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என காவல் துறையினர் 
தெரிவித்தனர். 
தகவலறிந்த சேலம் சரக காவல் துறை துணை தலைவர் செந்தில்குமார், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், துப்பாக்கியைக் கையாண்ட ஆயுதப்படை காவலரிடமும் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, பணியின் போது கவனக் குறைவாக இருந்ததாக காவலர் கேசவராஜை தாற்காலிக பணி நீக்கம் செய்து, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பி.ராஜன் உத்தரவிட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.