மணிப்பூர் தீவிரவாதி தில்லியில் கைது: என்ஐஏ நடவடிக்கை

மணிப்பூரில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நேமிசந்த் மெய்தி (22) என்பவரை தேசியப் புலானாய்வு அமைப்பினர் (என்ஐஏ) வியாழக்கிழமை கைது செய்தனர்.
Updated on
1 min read

மணிப்பூரில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நேமிசந்த் மெய்தி (22) என்பவரை தேசியப் புலானாய்வு அமைப்பினர் (என்ஐஏ) வியாழக்கிழமை கைது செய்தனர்.
மணிப்பூரில் கடந்த 2015-ஆம் ஆண்டில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் நேமிசந்த்துக்கு முக்கியத் தொடர்பு உண்டு.
தில்லியில் அவர் எந்த இடத்தில் கைது செய்யப்பட்டார் என்பதை என்ஐஏ அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. எனினும், அவர் காங்கிலிபாக் கம்யூனிஸ்ட் கட்சி (நோயோன்) என்ற பயங்கரவாத அமைப்பில் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வந்தார். கடந்த 2015-ஆம் ஆண்டு மணிப்பூரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தைக் குறிவைத்து சாலையின் இருபுறமும் வெடிகுண்டுகள் நிரப்பிய கேன்களை வைத்து பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்தனர். இதில் 18 ராணுவ வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் நேமிசந்துக்கு முக்கிய தொடர்பு உண்டு. இது தவிர மணிப்பூரில் ஒரு கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலிலும் நேமிசந்த் மீது குற்றம்சாட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேமிசந்த்தை என்ஐஏ, கோர்க்கா ரைபிள்ஸ் படைப்பிரிவு, மணிப்பூர் காவல்துறை ஆகியவற்றின் அதிகாரிகள் இணைந்து தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com