திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

ஆதார் அட்டையால் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள்: மத்திய அரசு மீது பாய்ந்த முன்னாள் அமைச்சர்! 

ஆதார் அட்டையால் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று மத்திய அரசு மீது காங்கிரசினைச் சேர்ந்த  முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2018, 8:51 am

சென்னை: ஆதார் அட்டையால் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று மத்திய அரசு மீது காங்கிரசினைச் சேர்ந்த  முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

முந்தைய காங்கிரஸ் அரசில் வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சராகப் பணிபுரிந்தவர் ஜெய்ராம் ரமேஷ். இவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆதார் அட்டை திட்டத்தினை செயல்படுத்திவரும் விதத்தினைக் கடுமையாக விமர்சிததுள்ளார்.  அப்பொழுது அவர் கூறியதாவது:

ஆதார் என்பது மிக மோசமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஒரு சிறந்த யோசனையாகும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முதலில் கொண்டு வந்த ஆதார் திட்டமானது சமூக நலத்திட்டங்களின் பயன்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் ஒரு கருவியாக மட்டுமே திட்டமிடப்பட்டது.  இதனை அடிப்படையாக வைத்து இத்தகைய சமூக நலத்திட்டங்களில் நிலவும் மோசடிகளை ஒழிக்கலாம் என்றும், போலி பயனாளர்களை களையெடுக்கலாம் என்றும் திட்டமிட்டோம்.

ஆனால் ஆதார் அட்டை என்பது தற்பொழுது விமான பயணச்சீட்டுகள் வாங்கவும், வங்கிக் கணக்குகள் துவங்கவும் மற்றும் அலைபேசி இணைப்புகள் வைத்திருக்கவும் தேவைப்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இது மிகவும் முட்டாள்தனமானது.

ஆதார் அட்டை இல்லாத காரணத்தால் சிலர் ரேஷன் பொருட்களை பெற முடியவில்லை; சிலர் முதியோர் ஓய்வூதியம் பெற இயலவில்லை. ஆதார் அட்டையால் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆதாரானது மக்களை சாகத் தூண்டுகிறது.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.         

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.