ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

இலங்கை தேசிய ஆம்புலன்ஸ் சேவை: காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

இலங்கை தேசிய ஆம்புலன்ஸ் சேவையை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி சனிக்கிழமை தொடங்கி வைத்தார். 

News image
Updated On :21 ஜூலை 2018, 1:23 pm

இலங்கை தேசிய ஆம்புலன்ஸ் சேவையை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி சனிக்கிழமை தொடங்கி வைத்தார். 

இலங்கை தேசிய ஆம்புலன்ஸ் சேவைக்காக இந்தியா முதற்கட்டமாக 22.8 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 7.6 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கியது. பிறகு, 2-ஆவது கட்டமாக இந்த சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்காக 15.2 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கியது. 

முதற்கட்டமாக வழங்கிய தொகையின் மூலம் 88 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்பட்டது. நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த சேவையை விரிவுப்படுத்துவதற்காக 209 ஆம்புலன்ஸ் வாகனங்களை இலங்கை வாங்கியது. 

இந்த தேசிய ஆம்புலன்ஸ் சேவையை இந்திய பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் சனிக்கிழமை தொடங்கிவைத்தார். இதன் தொடக்க விழாவில் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவும் பங்கேற்றார். 

இந்த தொடக்க விழாவில் மோடி பேசியதாவது, 

"இலங்கை முழுவதும் அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் சேவையை விரிவுப்படுத்த இந்தியா உதவி புரியும் என்று கடந்த ஆண்டு எனது பயணத்தின் போது நான் வாக்குறுதி அளித்தேன். அதனை குறுகிய காலகட்டத்தில் நிறைவேற்றியதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். 

இலங்கையை வெறும் அண்டை நாடாக மட்டும் பார்க்கவில்லை. இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்காசியாவின் நம்பகத்தன்மையான சிறந்த கூட்டாளியாகவே பார்க்கிறேன். இருநாட்டுடைய வளர்ச்சிப் பார்வையை நிஜமாக்க இலங்கையுடனான வளர்ச்சி ஒத்துழைப்பு முக்கியமானது. நமது மக்கள் அவர்களுடன் தொடர்ந்து தொடர்பிலேயே இருக்க வேண்டும். அதன்மூலம் ஒருவரை ஒருவர் அறிய முடியும், மேலும் நெருக்கமாகலாம். 

இந்த அவசர கால சேவையை நிறுவுதல் மற்றும் விரிவுபடுத்துதல் திட்டத்தில் இலங்கையின் கூட்டாளியாக இந்தியா இருப்பது எதேர்ச்சையானது அல்ல. இலங்கையின் சிறந்த மற்றும் மோசமான நாட்களிலும் இந்தியாவே முதல் ஆளாக உதவி புரிய இலங்கை முன்பு நிற்கும்" என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.