என் மீது குற்றம்சாட்டி எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யாத நிலையில், என்னை நேரில் அழைத்து விசாரித்துள்ளனர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை இயக்குநரகத்தில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜரான பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அரசு ஆவணங்களில் முறைப்படி பதிவாகியுள்ள அனைத்து தகவல்களையும் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்தேன். என் மீது கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து முதல் தகவல் அறிக்கை எதையும் பதிவு செய்யவில்லை. எனினும், என்னை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். 6 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் எனது பதில்களை தவறுகள் இல்லாமல் பதிவு செய்து கொள்வதிலேயே 3 மணி நேரத்தை செலவிட்டனர். அதன் பிறகு எனது பதில்களை வாசித்து கையெழுத்துப் பெற்றுக் கொண்டனர் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.