திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

தான் துவக்கிய கட்சியிலிருந்தே ராஜிநாமா செய்த சூப்பர் ஸ்டார் நடிகர்! 

விரைவில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ள சூழ்நிலையில், கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் உபேந்திரா தான் துவக்கிய கட்சியிலிருந்தே ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். 

News image
Updated On :6 மார்ச் 2018, 12:45 pm

பெங்களூரு: விரைவில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ள சூழ்நிலையில், கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் உபேந்திரா தான் துவக்கிய கட்சியிலிருந்தே ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். 

கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் உபேந்திரா. சினிமா தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதியன்று, 'கர்நாடகா பிரக்ஞன் ஜனதா கட்சி' என்ற பெயரில் புதிய கட்சியை துவக்கினார். அப்பொழுது அவர் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பெரும்பாலான அரசியல்வாதிகள் வாக்குறுதிகளைக் கொடுக்கிறாரகள். ஆனால் அவற்றை நிறைவேற்றுவதில்லை என்று குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் விரைவில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ள சூழ்நிலையில், உபேந்திரா தான் துவக்கிய கட்சியிலிருந்தே ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் கூறியதாவது:

என்னுடைய ராஜிநாமாவை கர்நாடகா பிரக்ஞன் ஜனதா கட்சிக்கு அனுப்பி வைத்து விட்டேன். தேர்தல் ஆணையத்தில் விரைவில் என்னுடைய புதிய கட்சியான 'ப்ரஜாக்கீயா' கட்சியினை பதிவு செய்வேன். வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டியிடுவேன்.     

நான் அரசியலுக்கு வந்ததன் மூலம் பணம் புகழ் சம்பாதிப்பதை விட அரசு நிர்வாகத்தில் சீர்திருத்தத்தைக் கொண்டு வருவதே எனது நோக்கம்.

கட்சி எதற்காகத் துவக்கப்பட்டதோ அதற்கு மாறாக செயல்பட்டு சிலர் கட்சியில் இருந்து விலகி விட்டனர். கட்சி நிர்வாகிகள் தேர்வு, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட விஷயங்களில் கட்சித் தொண்டர்களுக்குத் திருப்தியில்லை. 

விரைவில் துவக்கப்பபட உள்ள 'ப்ரஜாக்கீயா' கட்சியானது வெளிப்படையான நிர்வாகம், சுகாதாரம்,கல்வி மற்றும் பொதுமக்கள் நலனில் கவனம் செலுத்தும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.