காஷ்மீர் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்புப்படையினர் துப்பாக்கிச்சண்டை: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புட்காம் மாவட்டம் ஜாகூ அரிஜால் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட
காஷ்மீர் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்புப்படையினர் துப்பாக்கிச்சண்டை: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
Published on
Updated on
1 min read

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புட்காம் மாவட்டம் ஜாகூ அரிஜால் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர்.

புட்காம் மாவட்டத்தின் ஜாகூ அரிஜால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கடந்த வாரம் உளவுத்துறை எச்சரித்தது. அதையடுத்து அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை துப்பாக்கியால் சுட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். அவர்களிடம் இருந்து ங4 மற்றும் அஓ 47 ரக துப்பாகிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

உயிரிழந்த பயங்கரவாதிகள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

மேலும், அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com