

பணம் வைத்திருந்தது தொடர்பாக போலீஸார் சோதனை நடத்தியதை அடுத்து காங்கிரஸ் வேட்பாளர் தற்கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தார்.
தெலங்கானாவில் உள்ள காஜ்வெல் தொகுதியைச் சேர்ந்தவர் காங்கிரஸ் வேட்பாளர் ஒன்டேரு பிரதாப் ரெட்டி. இவர் வீட்டில் அதிகளவில் பணம் வைத்திருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி அப்பகுதி போலீஸார் சோதனையில் ஈடுபட முயன்றனர்.
இந்நிலையில், கோம்பள்ளியில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிராதப் ரெட்டி, தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டினார். மேலும் அவரது ஆதரவாளர்கள் பிரதாப் ரெட்டி வீட்டின் முன்பு போலீஸாருக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதையடுத்து, தேர்தல் விதிகளை மீறி நடந்துகொண்டதாகக் கூறி பிரதாப் ரெட்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆகியோர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.