திருநங்கை வேட்பாளர் திடீர் மாயம்: கடத்தல் காரணமாக இருக்கலாம் என பரபரப்பு

தெலங்கானாவில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திருநங்கை வேட்பாளர் திடீரென மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருநங்கை வேட்பாளர் திடீர் மாயம்: கடத்தல் காரணமாக இருக்கலாம் என பரபரப்பு
Updated on
1 min read

தெலங்கானாவில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திருநங்கை வேட்பாளர் திடீரென மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பகுஜன் இடதுசாரி அமைப்பு சார்பாக சந்திரமுகி எனும் திருநங்கை கோஷாமஹால் தொகுதியல் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், செவ்வாய்கிழமை அதிகாலை முதல் அவர் திடீரென மாயமானதால் அப்பகுதியில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் அப்பகுதி திருநங்கை அமைப்புக்கும் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அன்றைய தினம் காலை 7 மணியளவில் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவு தொடர்பாக கேள்வி எழுப்பியவர்களுக்கும் பதிலளித்துள்ளார். ஆனால், அவரது வீடு பூட்டியிருந்ததாகவும், செல்போன் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக திருநங்கை செயல்பாட்டாளர் பிட்டு கார்த்திக் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், அவர் தேர்தலில் போட்டியிடுவது பிடிக்காத மற்றும் திருநங்கை சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாகவே சிலர் அவரை கடத்தியிருக்கலாம் எனவும் கார்த்திக் தெரிவித்தார். திருநங்கை சந்திரமுகி வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com