இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஒவ்வொரு ராணுவ வீரரின் மரணமும் மனவேதனையை ஏற்படுத்துகிறது: ராஜ்நாத் சிங் வருத்தம்

ஒவ்வொரு ராணுவ வீரரின் மரணச் செய்தியும் தனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருத்தம் தெரிவித்தார்.

News image
Updated On :26 செப்டம்பர் 2018, 10:05 am

DIN

ஒவ்வொரு ராணுவ வீரரின் மரணச் செய்தியும் தனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருத்தம் தெரிவித்தார்.

லக்னோவில் பாஜக பொதுக்கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

ராணுவ வீரர்கள் நம் நாட்டின் பெருமைக்குரியவர்கள். ஒவ்வொரு முறை ராணுவ வீரர்கள் கொல்லப்படும்போதும் எனக்கு மிகுந்த மனவேதனை ஏற்படுத்துகிறது. எனது வேதனை உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு முறை இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்படும் போதும் இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. மிகவும் வருத்தமாக உள்ளது என்றார்.

முன்னதாக, செப். 18-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் ராம்கார் எல்லைப் பகுதியில் நடைபெற்ற திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது காணாமல் போன எல்லைப் பாதுகாப்புப் படை வீரரின் உடல் முழுவதும் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. 

இதேபோன்று நரேந்திர சிங் என்ற எல்லைப் பாதுகாப்புப் படை வீரரும் கடந்த மாதம் பயங்கரவாதிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.