இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வி.வி.பாட் இயந்திரங்களை அமைக்கும் விவகாரம்: மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுக எதிர்க்கட்சிகள் முடிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கையில்  50 சதவீதம் அளவுக்கு வாக்கு ஒப்புகைச் சீட்டு  சரிபார்ப்பு இயந்திரங்களை அமைக்கும் விவகாரத்தில், மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுக எதிர்க்கட்சிகள் முடிவு..

News image
Updated On :14 ஏப்ரல் 2019, 3:32 pm

DIN

புது தில்லி: வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கையில்  50 சதவீதம் அளவுக்கு வாக்கு ஒப்புகைச் சீட்டு  சரிபார்ப்பு இயந்திரங்களை அமைக்கும் விவகாரத்தில், மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுக எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

தில்லியில் உள்ள அரசியலமைப்பு மன்றத்தில் ஞாயிறன்று எதிர்க்கட்சிகளின் சார்பில் '‘ஜனநாயகத்தை பாதுகாப்போம்’ என்ற பெயரில் இந்த வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு தொடர்பான கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் காங்கிரஸ், தெலுங்கு தேசம், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் பிரதிநிதிகளும்  கலந்துகொண்டு பேசினர்.

தற்போதைய தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒரு கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தால் வேறொரு கட்சிக்கு வாக்குகள் விழுகின்றன என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி தனது பேச்சில் குறிப்பிட்டார்.

கருத்தரங்கின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரங்களில் 7 வினாடிகள் வரை ஒளிர வேண்டிய விளக்குகளானது 3 வினாடிகளில் அணைந்து விடுகிறது.

சரியான வகையில் நேரடி களஆய்வு செய்து பரிசீலிக்காமல் ஆன்லைன் மூலம் பல லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இதுபோல் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க எங்களிடம் ஏராளமான புகார்கள் உள்ளன.

அவற்றில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி பிரச்சனை மிக முக்கியமானதாகும். எனவே,வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கையில்  50 சதவீதம் அளவுக்கு வாக்கு ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு இயந்திரங்களை அமைக்க வேண்டும் என 21 எதிர்க்கட்சிகளும் ஒருமனதாக தீர்மானித்துள்ளன.

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையமானது போதிய அக்கறை காட்டவில்லை என்று நாங்கள் கருதுவைத்தால், இந்த கோரிக்கையை முன்வைத்து நாங்கள் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அபிஷேக் மனு சிங்வி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.