புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அடுத்த தேர்தலில் ராகுல் எங்கே போட்டியிடுவார் தெரியுமா?: மத்திய அமைச்சர் கிண்டல் 

அடுத்த தேர்தலில் ராகுல் எங்கே போட்டியிடுவார் என்பது குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கிண்டல் செய்துள்ளார்.

News image
Updated On :21 ஏப்ரல் 2019, 7:48 am

DIN

புது தில்லி: அடுத்த தேர்தலில் ராகுல் எங்கே போட்டியிடுவார் என்பது குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கிண்டல் செய்துள்ளார்.

வழக்கமாக உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் மட்டுமே போட்டியிட்டு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த முறை தென்னிந்தியாவில் கேரளாவின் வயநாட்டிலிருந்தும் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் அடுத்த தேர்தலில் ராகுல் எங்கே போட்டியிடுவார் என்பது குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கிண்டல் செய்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவைச் சேந்த மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:

தற்போது அமேதியில் போட்டியிடும் ராகுலுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. ஸ்மிருதி இரானியால் தோற்கடிக்கப்பட்டு விவோம்  என்பதாலேயே அவர் வயநாட்டிலும் போட்டியிடுகிறார்.

வயநாட்டில் இடதுசாரிகளுக்கு எதிராக போட்டியிடும் அவர், அக்கட்சியினரை விமர்சிக்க போவதில்லை என்று கூறியுள்ளார்.

இதற்கே தைரியம் இல்லாத ஒரு தலைவர் நாட்டுக்கு எந்த சேவையும் செய்ய இயலாது.

போட்டியிடும் இரண்டு தொகுதிகளிலும் ராகுல் தோல்வியடைவார். எனவே அடுத்த தேர்தலில் போட்டியிட அண்டை நாடுகளில்தான் தொகுதியைத் தேடுவார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.