இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஒமர், மெஹபூபாவின் கைது, ஜனநாயகத்துக்கு விரோதமானது: ராகுல் காந்தி

ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர்கள் ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி ஆகியோரை கைது செய்திருக்கும் அரசின் முடிவு அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று ராகுல் காந்தி டிவீட் செய்துள்ளா

News image
கோப்புப்படம்
Updated On :6 ஆகஸ்ட் 2019, 12:56 pm

DIN


ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர்கள் ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி ஆகியோரை கைது செய்திருக்கும் அரசின் முடிவு அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று ராகுல் காந்தி டிவீட் செய்துள்ளார். 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கப்பட்டதையடுத்து, அம்மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிடுகையில், 

"காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் ரகசிய இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்துக்கு விரோதமானது. மத்திய அரசின் இந்த முடிவு குறுகிய பார்வை கொண்ட முட்டாள்தன முடிவாகும். இதன்மூலம், தலைமை வெற்றிடத்தைக் கைப்பற்ற பயங்கரவாதிகளுக்கு இது வழிவகுக்கும். சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்" என்றார்.

இதேபோல், சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டது மீதான விவாதத்தின்போது, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா குறித்து தேசியவாத காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "ஃபரூக் அப்துல்லா அவருடைய விருப்பத்தின் பேரில்தான் வீட்டில் இருக்கிறார். அவர் வீட்டுக் காவலில் வைக்கப்படவில்லை" என்றார். 

இந்த நிலையில் காஷ்மீரில் செய்தியாளர்களிடம் பேசிய ஃபரூக் அப்துல்லா, "என் வீட்டின் வெளியே டிஎஸ்பி பணியமர்த்தப்பட்டுள்ளார். இதனால், யாரும் வெளியே போக முடியவில்லை, யாராலும் உள்ளே வர முடியவில்லை. இப்படி இருக்கையில் அமித் ஷா எப்படி பொய் பேசுகிறார் என்று தெரியவில்லை" என்றார். இதன்மூலம், ஃபரூக் அப்துல்லாவும் சிறை வைக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.