காஷ்மீர் விவகாரம்: இன்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றுவாரா பிரதமர்?

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் இன்று மாலை உரையாற்றுவார் என்று இந்திய வானொலி மையம் அறிவித்திருந்தது.
காஷ்மீர் விவகாரம்: இன்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றுவாரா பிரதமர்?
Published on
Updated on
1 min read


காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் இன்று மாலை உரையாற்றுவார் என்று இந்திய வானொலி மையம் அறிவித்திருந்தது.

அதில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றும் நிகழ்வு இன்று மாலை 4 மணிக்கு அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்படும் என்று இன்று காலை அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த டிவீட் சில மணி நேரத்தில் டிவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. இன்று அவர் காஷ்மீர் விவகாரம் குறித்து நாட்டு மக்களிடம் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முன்னதாக ஆகஸ்ட் 7ம் தேதி நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பாராத வகையில், முன்னாள் மத்திய அமைச்சர்  சுஷ்மா சுவராஜ் மரணம் அடைந்ததால், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று அவர் உரையாற்றுவார் என்று டிவிட்டரில் பதிவு செய்யப்பட்ட நிலையில், அதுவும் நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com