இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நடத்தையில் சந்தேகப்பட்ட கணவனுக்கு மனைவி கொடுத்த கொடூர தண்டனை 

தனது நடத்தையில் சந்தேகப்பட்ட கணவனுக்கு மனைவி ஒருவர் கொடுத்த கொடூர தண்டனை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

News image
Updated On :15 ஆகஸ்ட் 2019, 3:49 pm

DIN

மும்பை: தனது நடத்தையில் சந்தேகப்பட்ட கணவனுக்கு மனைவி ஒருவர் கொடுத்த கொடூர தண்டனை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

அசாமைச் சேர்ந்த பவிஷ்யா புராஹோகைன்  என்பவர் மும்பையில் உள்ள வசாய் பகுதியில் வசித்து வருகிறார். இவரது மனைவி குயின் சியா. அதே பகுதியில் வசித்து வரும் நாயக் என்பவர் புராஹோகைனின் நண்பவராவார். இவர் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வார். இதன் காரணமாக புராஹோகைனுக்கு தனது மனைவி மீது சந்தேகம் வரத் தொடங்கியது. நாயக்குடன் தனது மனைவி தகாத உறவு வைத்திருப்பதாக நினைத்தார். இதைத் தொடர்ந்து தம்பதியரிடையே அடிக்கடி சண்டை வரத் துவங்கியது. அப்படி எதுவும் இல்லை என்று மனைவி கூறியும் புராஹோகைன் இத்தகைய சண்டைகளைத் தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் செவ்வாயன்று வழக்கம் போல இருவரும் சண்டை போட்டுள்ளனர். பின்னர் புராஹோகைன் உறங்கி விட்டார். பின்னர் நாயக்கை வீட்டுக்கு அழைத்த குயின்சியா, அவர் உதவியோடு கணவனின் கால்களைக் கயிற்றால் கட்டியுள்ளார். சுத்தியலால் அவரை சரமாரியாகத் தாக்கினார்.  அத்தோடு நில்லாமல் மிளகாய்ப் பொடியை எடுத்து வந்து கணவரது கண்களில் தூவினார். பின்னர் அடுப்பில் இருந்து கொதிக்கும் எண்ணெய்யை சட்டியுடன் தூக்கி வந்து கணவர் மீது ஊற்றியுள்ளார். புராஹோகைனின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டுள்ளனர்.  அதன் பின்னர் நாயக்கையும் குயின்சியாவையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். போலீசார் தொடர்ந்து விசாரணைநடத்தி வருகின்றனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட புராஹோகைனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.