சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

ஜம்மு-காஷ்மீரில் கல்வீச்சு தாக்குதல்: லாரி ஓட்டுநர் சாவு

ஜம்மு-காஷ்மீரில் கல்வீச்சு கலவரம் காரணமாக லாரி ஓட்டுநர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:55 am

DIN

ஜம்மு-காஷ்மீரில் கல்வீச்சு கலவரம் காரணமாக லாரி ஓட்டுநர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

பிஜ்பெரா எனுமிடத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது. இதில் ஸ்ராதிபோரா உன்ஹால் பிஜ்பெரா பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் நூர் முகமது உயிரிழந்தார்.

இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் போலீஸார் கூறுகையில்,

பாதுகாப்புப் படை வாகனம் எனக் கருதி அந்த லாரி மீது அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் படுகாயமடைந்த லாரி ஓட்டுநர் உடனடியாக மீட்கப்பட்டு பிஜ்பெரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து எஸ்.கே.ஐ.எம்.எஸ். சௌரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

லாரி ஓட்டுநர் மரணத்துக்கு காரணமான கல்வீச்சு தாக்குதலில் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ஸ்ரீநகரில் சில தினங்களுக்கு முன் நடந்த கல்வீச்சு தாக்குதல் சம்பவத்தில் ஒரு சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.