இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தில்லி கிராரி தீ விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

தில்லி கிராரி பகுதியில் உள்ள ஜவுளிக் கிடங்கில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க  தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :23 டிசம்பர் 2019, 10:20 am

PTI


புது தில்லி: தில்லி கிராரி பகுதியில் உள்ள ஜவுளிக் கிடங்கில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க  தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறுகையில், இந்த தீ விபத்தில் காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவு முழுவதையும் தில்லி அரசே ஏற்கும் என்றும், அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

தில்லியின் புறநகர்ப் பகுதியான கிராரி என்ற இடத்தில் உள்ள 3 அடுக்குமாடிகளைக் கொண்ட கட்டடத்தில் இருந்த ஜவுளி கிடங்கில் நேற்று நள்ளிரவில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். அந்த குடியிருப்பில், வணிக நிறுவனங்களும், சில குடியிருப்புகளும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தில்லி தீயணைப்புத் துறையினர், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இது குறித்து பேசிய அமைச்சர் சத்யேந்திர ஜெயின், இந்த தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இவர்களில் ஒருவர் தீக்காயத்தாலும், மற்ற 8 பேரும் புகைமூட்டத்தால் மூச்சுத் திணறியும் உயிரிழந்தனர். மூன்று பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கிராரி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும், காயமடைந்தவர்களின் சிகிச்சை செலவை அரசே ஏற்பதோடு, அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.