அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

லக்னெளவில் இணைய சேவை முடக்கம் மேலும் இரு நாட்களுக்கு நீட்டிப்பு!

போராட்டம் மற்றும் வன்முறை காரணமாக லக்னெளவில் இணையதள சேவை முடக்கம் புதன்கிழமை நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

News image
Citizenship (Amendment) Act
Updated On :24 டிசம்பர் 2019, 5:48 am

DIN

போராட்டம் மற்றும் வன்முறை காரணமாக லக்னெளவில் இணையதள சேவை முடக்கம் புதன்கிழமை நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுப்பெற்று வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்திலும் கடந்த சில தினங்களாக போராட்டம் நீடித்து வருகிறது. போராட்டம் வன்முறையாக மாறி உயிர்பலிகளும், பொருட்சேதங்களும் நடைபெற்று வருகின்றன. போராட்டத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, போராட்டத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு லக்னெள உள்ளிட்ட இடங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 19ம் தேதியில் இருந்து அங்கு இணைய சேவை இல்லாத நிலையில், மாநில அரசு மேலும் இரு நாட்களுக்கு இணைய சேவை முடக்கத்தை நீட்டித்துள்ளது. அதன்படி, தலைநகர் லக்னெளவில் புதன்கிழமை நள்ளிரவு வரை இணைய சேவை வழங்கப்படாது என்று மாவட்ட அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். 

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளான நாளை(டிச.25) அவரது சிலையை லோக் பவனில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். எனவே, பிரதமர் வருகையையொட்டியும் இணைய சேவை முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.