அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உ.பி.யில் போராட்டத்திற்கு காரணமான 60 கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு காரணமாக  இருந்ததாகக் கோரி உத்தரப் பிரதேசத்தில் சுமார் 60 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்

News image
Updated On :23 டிசம்பர் 2019, 5:37 am

DIN

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு காரணமாக  இருந்ததாகக் கூறி உத்தரப் பிரதேசத்தில் சுமார் 60 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். 

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. உத்தரப்பிரதேசத்திலும் கடந்த சில தினங்களாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அது வன்முறையாகவும் வெடித்துள்ளது. இதில் பொதுச்சொத்துக்கள் பல சேதமாகியுள்ளன. போராட்டத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்றும் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் 10 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. சுமார் 30 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். அதில் 12 பேர் காவலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, போராட்டம் நடக்க க் காரணமாக இருந்ததாகக் கூறி முசாபர்நகரில் உள்ள 60 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி அபிஷேக் யாதவ், 'ஏற்கனவே அந்த பகுதியில் உள்ள கடைகளை மூடும்படி நாங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தோம். ஆனால், எச்சரிக்கையை மீறி, அவர்கள் கடையை திறந்தனர். கடைகளுக்கு முன்பாக தான் போராட்டக்காரர்கள் கூடினார்கள். எனவே, போராட்டம் நடத்த காரணமாக இருந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது' என்று விளக்கம் தெரிவித்தார். 

முன்னதாக, முதல்வர் யோகி ஆதித்யநாத், 'குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டவர்கள்/ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வன்முறையினால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும்' என்று எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.