தில்லியில் ஏற்படும் தொடர் தீ விபத்துக்களின் ஒரு பகுதியாக மகாராணி பாக் பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதியில் அமைந்துள்ள ஒரு கடையில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், கடுமையாகப் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இருப்பினும் அந்த கடை தீயில் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, கிராரி பகுதியில் அமைந்துள்ள ஜவுளிக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். அனாஜ் மண்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.