இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம்: மாதா அமிர்தானந்த மயி அறிவிப்பு 

புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படுவதாக மாதா அமிர்தானந்த மயி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :19 பிப்ரவரி 2019, 3:15 pm

DIN

பெங்களூரு: புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படுவதாக மாதா அமிர்தானந்த மயி தெரிவித்துள்ளார்.

கடந்த 14-ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மரணமடைந்தோரின் குடும்பங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படுவதாக மாதா அமிர்தானந்த மயி தெரிவித்துளார்.

இதுதொடர்பாக மாதா அமிர்தானந்த மயி மடம் சார்பாக செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த 40 சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு மாதா அமிர்தானந்த மயி மடம் தலா ரூ.5 லட்சம் வழங்க உள்ளது.

நாட்டைக் காக்க வேண்டும் என்ற தங்களது தர்மத்திற்காக உயிர் நீத்த அந்த வீரர்களின் குடும்பங்களை ஆதரிப்பது என்பது நமது தர்மமாகும். 

மரணமடைந்த வீரர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களது அன்புக்குரியவர்களுக்கு எனது இதயபூர்வ ஆதரவைத் தெரிவிக்கிறேன். அவர்களது நல்வாழ்விற்கும் மன சமாதானத்திற்கும் நாம் அனைவ்ரும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாதா அமிர்தானந்த மயி  2019-ஆம் ஆண்டுக்கான தனது பாரத சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக வட மாநில பயணத்தில் இருப்பதால், அவர் சார்பாக மாதா அமிர்தானந்த மயி  மடம் நிதியுதவியை அறிவித்துள்ளது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.