இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கொல்கத்தாவில் திரிணமுல் காங்கிரஸ் தலைவர் சுட்டுக் கொலை: தொடரும் அரசியல் கொலைகள்   

கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் நில்வுகிறது

News image
Updated On :5 ஜூன் 2019, 1:56 pm

DIN

கொல்கத்தா கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் நில்வுகிறது

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது பா.ஜனதா, இடதுசாரியினர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே கடும் மோதல் காணப்பட்டது. குறிப்பாக அமித் ஷா பங்கேற்ற பேரணியின் போது பாஜக மற்றும் திரிணாமுல் தொண்டர்களிடையே அடிதடி ஏற்பட்டது.

தேர்தல் முடிவுகளில் மாநிலத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 18 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. அரசியல் வன்முறைக்கு பெயர் போன மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்கு பின்னரும் அரசியல் வன்முறை தொடர்கிறது.

இந்நிலையில் கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் நில்வுகிறது

வடக்கு கொல்கத்தாவின் நிம்தா பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் நிர்மல் குண்டு என்பவர் கடையொன்றில் நின்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் அவரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் இரு குண்டுகள் நிர்மல் குண்டுவின் உடலில் பாய்ந்துள்ளது.

உடனடியாக  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலே உயிரிழந்தார். அங்கிருந்து எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை தற்போது போலீசார் ஆய்வு செய்து வருகின்றாரகள்.

இதனிடையே நிர்மல் குண்டுவை பாஜகவின் கொலை செய்ததுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.