இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ரமலான், வெயில் காரணமாக வாக்குப்பதிவை காலை 5.30 மணிக்குத் தொடங்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை

வெயில் காரணமாக மக்களவை தேர்தலுக்கான அடுத்த கட்ட வாக்குப்பதிவை காலை 5.30 மணிக்குத் தொடங்கலாமே என்று பொது நல வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

News image
Updated On :2 மே 2019, 5:42 am

DIN


புது தில்லி: வெயில் காரணமாக மக்களவை தேர்தலுக்கான அடுத்த கட்ட வாக்குப்பதிவை காலை 5.30 மணிக்குத் தொடங்கலாமே என்று பொது நல வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

பொது நல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையம் இந்த பரிந்துரையை பரிசீலிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். 

ரமலான் மாதம் தொடங்கவிருப்பதால் வாக்குப்பதிவை முன்கூட்டியே தொடங்க வைக்கப்பட்ட பரிந்துரையை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், மீதமுள்ள 3 கட்ட வாக்குப்பதிவின் நேரத்தை மாற்றுவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

வெயில் காரணமாக மக்களவை தேர்தலுக்கான அடுத்த கட்ட வாக்குப்பதிவை காலை 5.30 மணிக்குத் தொடங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை வாக்குப்பதிவை நடத்துவதற்கு பதில் காலை 5.30 மணிக்கே வாக்குப்பதிவை தொடங்க உத்தரவிடக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

மேலும், ரம்ஜான் தொழுகை மாதமும் தொடங்கவிருப்பதால் காலை 5.30க்கே வாக்குப்பதிவை தொடங்குவது சாதகமாக இருக்கும். வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மதியத்துக்குப் பிறகு மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.