மத்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் உயர் அதிகாரிகளின் பாலியல் தொந்தரவு காரணமாக பெண் அதிகாரி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், ஹைதராபாத்தில் உள்ள 'பெல்' நிறுவனத்தில் 'கணக்கு அலுவலராக' (Accounts Officer) வேலை செய்து வந்துள்ளார். 33 வயதான இவர் வியாழக்கிழமை மியாப்பூர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
பெண் அதிகாரியின் இந்தத் தற்கொலை குறித்து மியாப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெண் அதிகாரிக்கு அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். துணை பொது மேலாளர் (நிதி) மற்றும் அவருடன் வேலை செய்யும் 6 சக அதிகாரிகள் பெண் அதிகாரியிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் இதுகுறித்து கூறுகையில், பெண் அதிகாரி தனியாக இருந்தபோது தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியே இருந்த குடும்பத்தினர், வீட்டிற்கு வந்து பார்த்த போது அவரது உயிர்.பிரிந்திருந்ததது.
மேலும் தற்கொலை செய்துகொண்ட பெண் அதிகாரி ஒரு கடிதத்தையும் எழுதி வைத்துள்ளார். அதில், தனது நிறுவனத்தின் டிஜிஎம் மற்றும் ஆறு சக அதிகாரிகள் தனது மொபைல் போனை ஹேக் செய்து தனது மொபைலில் வரும் போன் அழைப்புகளை வைத்து மிரட்டி தன்னை துன்புறுத்தியதாக அவர் அதில் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், அவர்களில் சிலர் பாலியல் தொந்தரவும் செய்ததாக.குறிப்பிட்டுள்ளார்.
பெண் அதிகாரியின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் மேற்குறிப்பிட்ட பொது மேலாளர் உள்ளிட்ட 7 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேரூர்கடா அரசு மனநல காப்பகத்தில் கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு!
லவ் ஜிகாத்! காதல் திருமணம் செய்த நடிகர் ஆமிர் கானுக்கு மிரட்டல்! லாரன்ஸ் பிஷ்னோய்க்கு தொடர்பா?

மேக்கேதாட்டு அணை விவகாரம்: நாடாளுமன்றத்தில் திமுக ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்!
மிதுனம் - இன்றைய ராசி பலன் (19.07.2026)
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan



