திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த 8 பயங்கரவாதிகள் கைது

ஜம்மு-காஷ்மீரில் உள்ள சோபோர் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற அதிரடி நடவடிக்கையின் அடிப்படையில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். 

News image

கோபுப் படம்

Updated On :10 செப்டம்பர் 2019, 8:22 am IST

ஜம்மு-காஷ்மீரில் உள்ள சோபோர் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற அதிரடி நடவடிக்கையின் அடிப்படையில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். 

அப்பகுதியில் வசிக்கும் மக்களை அச்சுறுத்தும் விதமாக சுவரொட்டிகளை ஒட்டியது மற்றும் சமீபத்தில் அங்கு நடந்த சில பொதுமக்களின் உயிரிழப்புகள் உள்ளிட்டவை தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில் பயங்கரவாதிகள் 8 பேர் பிடிபட்டுள்ளனர்.

அஜிஸ் மிர், ஒமர் மிர், தஸீப் நஜர், இமிதியாஸ் நஜர், ஒமர் அக்பர், பைஸன் லதீப், தானிஷ் ஹபீப் மற்றும் சௌகத் அகமது மிர் ஆகிய 8 பயங்கரவாதிகள் இந்த சதிச் செயலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து கணினி, சுவரொட்டி தயாரிப்பு இயந்திரம், துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.