ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி: ஸ்ரீஹரிகோட்டாவிற்கு பாதுகாப்பு அதிகரிப்பு

கடல்வழியாக தென்னிந்தியாவில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை விடுத்த எச்சரிக்கை எதிரொலியாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவு தளத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

Updated On :14 செப்டம்பர் 2019, 1:30 am IST


கடல்வழியாக தென்னிந்தியாவில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை விடுத்த எச்சரிக்கை எதிரொலியாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவு தளத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 
இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் போலீஸார், உளவுத்துறையினர் ஆகியோர் தீவிர கண்காணிப்பு, சோதனை ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள செயற்கைக்கோள் ஏவுதளத்தில்  தீவிரவாதிகள் நாச வேலைகளில் ஈடுபடாமல் தடுக்க அந்த பகுதியில் உச்சகட்ட பாதுகாப்புப் பணிகள் செய்யப்பட்டுள்ளன.
வங்கக் கடலோரத்தில் இருக்கும் ஸ்ரீஹரிகோட்டா வனப்பகுதிகள் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க செயற்கைகோள் ஏவுதளத்தைச் சுற்றியுள்ள வனப் பகுதிகள் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், போலீஸார் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்பின் ஒரு பகுதியாக முக்கிய சாலையைக் கடந்து ஸ்ரீஹரி கோட்டாவிற்குச் செல்லும் சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் வழக்கத்தைவிட அதிக போலீஸார் குவிக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்படுகிறது.
அதேபோல் ஸ்ரீஹரிகோட்டா பகுதியை ஒட்டி இருக்கும் கடல் பகுதியில் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்களை கடலோரக் காவல்படையினர் விசாரணை செய்கின்றனர். மீனவர்கள் மீது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அவர்களை போலீஸார் தனியே அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.