மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரசுக்கும் மக்களுக்கும் இடையே இடைவெளி கூடாது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

அரசுக்கும் மக்களுக்கும் இடையே காணப்படும் இடைவெளியை இல்லாமல் செய்ய வேண்டும் என்று ஐஏஎஸ் அதிகாரிகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

News image
Updated On :23 செப்டம்பர் 2019, 8:09 pm

DIN


அரசுக்கும் மக்களுக்கும் இடையே காணப்படும் இடைவெளியை இல்லாமல் செய்ய வேண்டும் என்று ஐஏஎஸ் அதிகாரிகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு பயிற்சியை நிறைவு செய்த 169 ஐஏஎஸ் அதிகாரிகள், ராம்நாத் கோவிந்தை தில்லியில் உள்ள அவரது மாளிகையில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினர். 
அவர்கள் தற்போது அரசின் பல்வேறு துறைகளில், அமைச்சகங்களில் உதவிச் செயலர்களாகப் பணியாற்றி வருகின்றனர். அவர்களிடம் ராம்நாத் கோவிந்த் கூறியதாக, குடியரசுத் தலைவர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் பணியில் அதிகபட்ச வெற்றியை சாத்தியமாக்குவதற்கான அணுகுமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும். இலக்கை எட்டுவதில் ஒவ்வொருவரையும் சேர்த்துக் கொண்டு, அவர்களின் பங்களிப்பை அங்கீகரித்து கூட்டு முயற்சி, கூட்டு உழைப்பு ஆகியவற்றை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு பணியாற்றும் காலத்தில் முன்மாதிரியாகத் திகழ வேண்டும். சமூக-பொருளாதார திட்டங்களை செயல்படுவத்துவதில் மக்கள் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும்.
அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான இடைவெளி இல்லாமல் போக வேண்டும். மக்களையும், அவர்களின் உணர்வுகளையும் மையமாகக் கொண்டு அலுவலர்களின் அணுகுமுறைகள் இருக்க வேண்டும். மக்கள் வாழ்வதற்கான சூழலை எளிமையாக்க வேண்டும் என்பதை நமது கடமையாகக் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் பொருளாதாரம் ரூ.350 லட்சம் கோடியாக அதிகரிக்க வேண்டும்; விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க வேண்டும்; சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும்; நாட்டின் வளர்ச்சியில் பெண்கள் சம அளவில் பங்களிப்பு செலுத்த வேண்டும் போன்ற இலக்குகளை எட்ட வேண்டுமெனில் உங்கள் பணியை திறம்படச் செய்திட வேண்டும்.
நீங்கள் கடுமையாக உழைத்ததால், வாழ்க்கையில் இந்த இடத்தை வந்தடைந்து இருக்கிறீர்கள். 
இதே உத்வேகத்துடனும், அர்ப்பணிப்புடனும் நாட்டு மக்கள் நீங்கள் பணியாற்ற வேண்டுமென ராம்நாத் கோவிந்த் கேட்டுக் கொண்டார் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.