திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

குறிப்பிட்ட சில பொதுத்துறை வங்கிகளை மூட உள்ளதா ஆர்பிஐ?  நிதித்துறை செயலாளர் விளக்கம் 

குறிப்பிட்ட சில வங்கிகளை ஆர்பிஐ மூட உள்ளதாக, சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திக்கு, மத்திய நிதித்துறை செயலாளர் விளக்கமளித்துள்ளார்.

News image

மத்திய ரிசர்வ் வங்கி

Updated On :25 செப்டம்பர் 2019, 4:13 pm IST

புது தில்லி: குறிப்பிட்ட சில வங்கிகளை ஆர்பிஐ மூட உள்ளதாக, சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திக்கு, மத்திய நிதித்துறை செயலாளர் விளக்கமளித்துள்ளார்.

வங்கித் துறையில் மிகப்பெரிய சீர்திருத்தமாக, பல்வேறு பொதுத் துறை வங்கிகளை இணைப்பதாகவும், பொதுத் துறை வங்கிகளை சர்வதேச தரத்துக்கு மாற்றும் முயற்சியாகவும், வங்கிகளின் கடன் வழங்கும் திறனை அதிகப்படுத்தவும் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாத இறுதியில் அறிவித்தார். மத்திய அரசின் இந்த இணைப்பு நடவடிக்கைக்குப் பிறகு 12 பொதுத் துறை வங்கிகள் மட்டுமே நடைமுறையில் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக நிதித் துறைச் செயலர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், நிகழாண்டின் தொடக்கத்தில், பாங்க் ஆஃப் பரோடாவுடன் தேனா வங்கியும், விஜயா வங்கியும் இணைக்கப்பட்டன. அதற்கு முன், பாரத ஸ்டேட் வங்கியின் 5 துணை வங்கிகள், பாரதிய மகிளா வங்கி ஆகியவை பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டன. இதனால் எந்த ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கையும் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் குறிப்பிட்ட சில பொதுத்துறை வங்கிகளை ஆர்பிஐ மூட உள்ளதாக, சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வேகமாக பரவத் துவங்கியது. 

அதையடுத்து சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் தவறானவை என்றும், பொதுத்துறை வங்கிகள் மூடப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் விளக்கமளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.