ஊரடங்கையும் தாண்டி பிரியாணியுடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட கர்நாடக எம்எல்ஏவின் பிறந்தநாள்

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் இறுதிச் சடங்குகளும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் கூட ஒரு சில உறவினர்களோடு நடத்தி முடிக்கப்பட்ட
ஊரடங்கையும் தாண்டி பிரியாணியுடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட கர்நாடக எம்எல்ஏவின் பிறந்தநாள்
Updated on
1 min read


கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் இறுதிச் சடங்குகளும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் கூட ஒரு சில உறவினர்களோடு நடத்தி முடிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், எது ஒன்றும் எங்களை தடுத்து நிறுத்தாது என்ற வகையில் கர்நாடக மாநிலத்தில் துருவெக்கேரே பாஜக எம்எல்ஏ ஜெயராமின் பிறந்தநாள் கொண்டாட்டம் குப்பி தாலுகாவில் உள்ள இடகுரு கிராமத்தின் அரசுப் பள்ளியில் வெகுக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுள்ளது.

தொண்டர்கள் பலரும் திரண்டு, கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதோடு, சுமார் 500 பேருக்கு பிரியாணி பரிமாறப்பட்டது. 

இதில் மிக சுவாரஸ்யம்  என்னவென்றால், இந்த நிகழ்ச்சியின் போது பேசிய எம்எல்ஏ, கரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி, மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பது பற்றி கூறியதுதான்.

இந்த சம்பவம் குறித்து பல அரசியல் தலைவர்களும் தங்களது விமரிசனத்தை முன் வைத்து வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com