குஜராத்தில் மேலும் 6 பேர் கரோனாவுக்கு பலி: உயிரிழப்பு 77 ஆனது


அகமதாபாத்: குஜராத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு மேலும் 6 பேர் பலியாகியுள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 லட்சத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் மேலும் 127 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த மாநில முதன்மைச் செயலர் ஜெயந்தி ரவி சுகாதாரத்துறை அதிகாரி தகவல் தெரிவித்தார்.
இதுவரை அந்த மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 2,066 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் 131 பேர் குணமடைந்த நிலையில், 77 பேர் பலியாகியுள்ளனர்.
புதிதாக உயிரிழந்த 6 பேரில், அனைவரும் 50 முதல் 72 வயதுக்குட்பட்டவர்களாவர். அதில், 5 பேர் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் பாவ்நகரை சேர்ந்தவர்கள் ஆவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...