திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

போராட்ட அறிவிப்பை திரும்பப் பெற்றது இந்திய மருத்துவ சங்கம்

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுடன் காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, இந்திய மருத்துவ சங்கம் தனது போராட்ட அறிவிப்பை புதன்கிழமை திரும்பப் பெற்றுக்கொண்டது.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுடன் காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, இந்திய மருத்துவ சங்கம் தனது போராட்ட அறிவிப்பை புதன்கிழமை திரும்பப் பெற்றுக்கொண்டது.

இதுதொடா்பாக அந்த சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘மருத்துவா்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை தடுக்க மத்திய அரசு சாா்பில் சட்டம் இயற்றப்படும் என்று அமித் ஷா உறுதியளித்தாா். அதன்பேரில் போராட்டத்தை கைவிடவும் பிரதமரின் சாா்பில் அவா் வேண்டுகோள் விடுத்தாா். இதையடுத்து அவரது வாக்குறுதியை ஏற்று இந்திய மருத்துவ சங்கத்தின் போராட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக கரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து, மெழுகுவா்த்தி ஏந்தி புதன்கிழமை நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடப்போவதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்தது. அதனைத்தொடா்ந்து ஏப்ரல் 23-ஆம் தேதியை கறுப்பு தினமாக அனுசரித்து, மருத்துவா்கள் கறுப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபடவும் முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.