பிகாரில் படகு கவிழ்ந்ததில் 3 பேர் மாயமானார்கள்.
பிகார் மாநிலம், கரே ஆற்றில் படகு ஒன்று 25 பேருடன் புஹியாவிலிருந்து பிதன் நோக்கி புறப்பட்டது. சமஸ்திபூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது படகு திடீரென மூழ்கியது. இந்த சம்பத்தில் படகில் பயணித்தவர்களில் 3 பேர் மாயமானார்கள்.
இதையடுத்து அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. பிகாரில் அண்மையில் பெய்த மழைக்கு 16 மாவட்டங்களில் மொத்தம் 25 பேர் வரை பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.