மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிகாரில் ஆகஸ்ட் 25 முதல் பொதுப்போக்குவரத்து தொடக்கம்

பிகாரில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொதுப் போக்குவரத்து ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
பிகாரில் ஆகஸ்ட் 25 முதல் பொதுப்போக்குவரத்து தொடக்கம்
Updated On :25 ஆகஸ்ட் 2020, 5:40 am

DIN

பிகாரில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொதுப் போக்குவரத்து சேவை ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. பொது முடக்கத்தின் பகுதியாக அனைத்து மாநிலங்களிலும் பொதுப்போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதையொட்டி கடந்த மார்ச் மாதம் முதல் பிகாரில் பொதுப்போக்குவரத்து இயங்கவில்லை.

இந்நிலையில் பிகாரில் நடைப்பெற்ற மாநில நெருக்கடி மேலாண்மைக் குழுவின் கூட்டத்தில், ஆகஸ்ட் 25 முதல் மாநிலத்தில் பேருந்து சேவை உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து முறையை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, "வாகனங்கள் ஒவ்வொரு நாளும் சுத்தம் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு பயணத்திற்குப் பிறகும் பேருந்து சுத்திகரிப்பு செய்யப்பட வேண்டும். வாகனங்களில் ஏறும் போது சமூக தூரத்தை பின்பற்ற வேண்டும், பயணிகள் பயணிக்கும் போது முகமூடி அணிய வேண்டும்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.