யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பேச்சுவார்த்தையில் பங்கேற்பது பற்றி விவசாய சங்கங்கள் இன்று ஆலோசனை

மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

News image
பேச்சுவார்த்தையில் பங்கேற்பது பற்றி விவசாய சங்கங்கள் இன்று ஆலோசனை
Updated On :1 டிசம்பர் 2020, 4:41 am

DIN

மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

தில்லி நோக்கி செல்வோம் என்று பெயரில் லட்சக்கணக்கான விவசாயிகள் தில்லியிலும், அதன் எல்லைப் பகுதிகளிலும் குவிந்து உள்ளனர். விவசாயிகளின் நலனுக்குக் கேடு விளைவிக்கும் வகையில் இந்தச் சட்டங்கள் உள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் தலைவர்களை செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை கூறியது: புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுடன் டிச.3- ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பனிக்காலம், கரோனா தொற்று பரவி வரும் சூழலில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

எனவே, பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில் டிச.1- ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாய சங்கத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் இன்று ஆலோசனை செய்து, மத்திய அரசு விடுத்த பேச்சுவார்த்தை அழைப்பை ஏற்றுக் கொள்வதா? வேண்டாமா? என்று முடிவு செய்யவிருப்பதாக விவசாயிகளின் தலைவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, புதிய வேளாண் சட்டங்களை ரத்துச் செய்ய வேண்டும் என்ற எங்களின் கோரிக்கைகளிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. முடிவு தெரியாமல் நாங்கள் தில்லியிலிருந்து செல்ல மாட்டோம். கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். எங்களின் ‘மனதின் குரலை’ (மன்கிபாத்) பிரதமா் மோடி கேட்க வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா்.

அரசு எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கும் என்று எதிா்பாா்க்கிறோம். ஒருவேளை அரசு எங்களைப் புறக்கணித்தால் அதற்கான விலையை அவா்கள் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் விவசாயிகள் எச்சரித்தனா். அரசின் பதிலைப் பாா்த்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வோம் என்றும் அவா்கள் குறிப்பிட்டிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.