மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பேச்சுவார்த்தை பலனளிக்கும் என நம்புகிறோம்: விவசாய சங்கம்

தில்லியில் மத்திய அரசுடன் இரண்டாவது கட்டமாக நடைபெறும் பேச்சுவார்த்தை பலனளிக்கும் என நம்புகிறோம் என்று விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகத் தெரிவித்துள்ளார்.

News image
பேச்சுவார்த்தை பலனளிக்கும் என நம்புகிறோம்: விவசாய சங்கம்
Updated On :3 டிசம்பர் 2020, 6:51 am

DIN

தில்லியில் மத்திய அரசுடன் இரண்டாவது கட்டமாக நடைபெறும் பேச்சுவார்த்தை பலனளிக்கும் என நம்புகிறோம் என்று விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் சட்டமாக நிறைவேற்றப்பட்டன.

இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியாணா மாநில விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுடன் கடந்த செவ்வாய்க்கிழமை அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இதனிடையே 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தை குறித்து தில்லி விஞ்ஞான்பவனில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகத், 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தை பலனளிக்கும் என நம்புவதாகக் கூறினார். எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லையென்றால், குடியரசு நாளில் தில்லியில் நடைபெறும் பேரணியில் விவசாயிகள் பங்கேற்பார்கள் என்று எச்சரித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.