யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

போராட்டத்தை விவசாயிகள் கைவிட வேண்டும்: நரேந்திர சிங் தோமர்

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News image
மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்
Updated On :5 டிசம்பர் 2020, 4:59 pm

DIN


தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், விவசாயிகளுடனான மத்திய அமைச்சர்களின் பேச்சுவார்த்தை சனிக்கிழமை நடைபெற்றது.

தில்லி விஞ்ஞான் பவனில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான கூட்டத்தில் ஏராளமான விவசாய சங்கத் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் உறுதியான முடிவுகள் எதுவும் எடுக்கப்படாததால் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 9-ஆம் தேதி நடைபெறும் என அகில இந்திய கிஷான் சபையின் பொதுச்செயலாளர் ஹன்னா மொல்லா தெரிவித்தார்.

இது குறித்து பேசிய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயிகளின் அனைத்து பிரச்னைகளையும் பேசித்தீர்க்க மத்திய அரசு தயாராக உள்ளது. விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தங்களது குழந்தைகளையும் குடும்பத்தாரையும் வீட்டிற்கு அனுப்பிவைக்க வேண்டும்.

விவசாயிகளின் பிரச்னைகளை விவசாயிகளின் கண்ணோட்டத்திலேயே அரசு அணுகும். மூத்த விவசாயிகளும் வீடு திரும்ப வேண்டும்.

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும். அதற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இதை சந்தேகிப்பது ஆதாரமற்றது. குறைந்தபட்ச ஆதரவு விலையில் சந்தேகம் ஏற்பட்டால், அதைத் தீர்க்க அரசாங்கம் தயாராக உள்ளது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.