இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

விவசாயிகளின் போராட்டத்துக்குப் பின்னணி யார்? ஊடகங்களை விசாரிக்கச் சொல்லும் மத்திய அமைச்சர்

தலைநகர் தில்லியின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் குவிந்து வரும் விவசாயிகளின் போராட்டத்துக்குப் பின்னால் வேறு ஏதேனும் சக்தியின் தூண்டுதல் இருக்கிறதா?

News image
விவசாயிகளின் போராட்டத்துக்குப் பின்னணி யார்? ஊடகங்களை விசாரிக்கச் சொல்லும் மத்திய அமைச்சர்
Updated On :11 டிசம்பர் 2020, 6:01 am

DIN


புது தில்லி: தலைநகர் தில்லியின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் குவிந்து வரும் விவசாயிகளின் போராட்டத்துக்குப் பின்னால் வேறு ஏதேனும் சக்தியின் தூண்டுதல் இருக்கிறதா? இருந்தால் அது எது என்று வெளிச்சத்துக்குக் கொண்டு வருமாறு மத்திய அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இணைந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தனர்.

மத்திய அரசு ஏற்கனவே வேளாண் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான பரிந்துரையை அனுப்பி வைத்துவிட்டது. ஆனால் தற்போது அந்த பரிந்துரைகளை விவசாய சங்கங்கள் நிராகரித்துள்ளன. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். அதேவேளையில் அடுத்து வரும் நாள்களில் போராட்டம் தீவிரம்பிடிக்கும் என்றும், தில்லிக்கு வரும் தேசிய நெடுஞ்சாலைகள் முடக்கப்படும் என்றும் விவசாயிகள் எச்சரித்துள்ளனர் என்று அமைச்சர்கள் கூறினர்.

அப்போது, மத்திய அமைச்சர் தோமரிடம், விவசாயிகளின் போராட்டத்துக்குப் பின்னால் வேறு ஏதேனும் சக்தி இருக்கிறது என்று நினைக்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஊடகங்களின் கண்கள் மிகவும் கூர்மையானவை. எனவே, அதுபற்றி கண்டுபிடிக்கும் பொறுப்பை அவர்களிடமே விட்டுவிடுகிறேன் என்று தெரிவித்தார்.

மேலும், ஊடகங்கள் தங்களது புலனாய்வு திறனைப் பயன்படுத்தி, இந்த போராட்டத்துக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும் என்று அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

அதேவேளையில், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசின் கதவுகள் எப்போதும் திறந்தே இருப்பதாகவும் அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

மத்திய அமைச்சர்களின் இந்தக் குற்றச்சாட்டை விவசாயிகள் சங்கத்தினர் மறுத்துள்ளனர். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட போராட்டம் என்று கூறியிருக்கிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.