இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

விவசாய சங்கத் தலைவர்கள் நாளை உண்ணாவிரதம்

​புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் அனைத்து விவசாய சங்கத் தலைவர்களும் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக விவசாயத் தலைவர் குர்னம் சிங் தெரிவித்துள்ளார்.

News image
சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள்
Updated On :13 டிசம்பர் 2020, 3:14 pm

DIN


புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் அனைத்து விவசாய சங்கத் தலைவர்களும் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக விவசாயத் தலைவர் குர்னம் சிங் தெரிவித்துள்ளார்.

தில்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த குர்னம் சிங் தெரிவித்ததாவது:

"அனைத்து விவசாய சங்கத் தலைவர்களும் அவர்கள் இருக்கும் இடத்தில் நாளை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். நாளை முதல் போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் நோக்கத்தில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 9 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடைபெறவுள்ளது. மற்றபடி போராட்டம் வழக்கம்போல் நடைபெறும்.

சில குழுக்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு அரசு நிறைவேற்றியுள்ள சட்டங்களுக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். அவர்கள் அரசின் கைப்பாவையாக இருந்து எங்களது போராட்டத்தை நாசப்படுத்த சதி செய்கின்றனர். நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தை அகற்ற அரசு சதித் திட்டம் தீட்டி வருகிறது."

மற்றொரு விவசாயத் தலைவர் ஷிவ் குமார் தெரிவித்ததாவது:

"விவசாயிகள் தில்லி வருவதை அரசாங்கத்தின் அமைப்புகள் தடுக்கின்றன. ஆனால், எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். 3 சட்டங்களும் திரும்பப் பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறோம். இந்த போராட்டத்தில் பங்கெடுத்துள்ள அனைத்து விவசாயத் தலைவர்களும் ஒற்றுமையாக இருக்கிறோம்."

மேலும் ஒரு விவசாயத் தலைவர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்ததாவது: 

"பேச்சுவார்த்தை நடத்த மற்றொரு முன்மொழிவை அரசு வழங்கினால், எங்களது குழு அதுகுறித்து முடிவெடுக்கும். போராட்டத்தின்போது அமைதி காக்க அனைவரையும் வலியுறுத்துகிறோம்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.