அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கரோனா அச்சுறுத்தல்: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் ரத்து

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த மாதம் நடைபெற இருந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image
கரோனா அச்சுறுத்தல்: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் ரத்து
Updated On :15 டிசம்பர் 2020, 5:56 am

DIN

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த மாதம் நடைபெற இருந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிப்பது தொடர்பாக காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அதிரஞ்சன் செளத்ரி எழுதிய கடிதத்திற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி பதிலளித்துள்ளார். அதில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக குளிர்காலக் கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக குளிர்காலக் கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் முன்கூட்டியே நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.