இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

2020 முடிவதற்குள் விவசாய பிரச்னைகளுக்குத் தீர்வு: தோமர் நம்பிக்கை

2020-ஆம் ஆண்டு முடிவதற்கு முன்பாக விவசாயப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News image
வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் (கோப்புப்படம்)
Updated On :18 டிசம்பர் 2020, 11:43 am

DIN


2020-ஆம் ஆண்டு முடிவதற்கு முன்பாக விவசாயப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது, ''வேளாண் சட்டங்கள் தொடர்பான  விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பல்வேறு விவசாயக் குழுக்களுடன் மத்திய அரசு முறைசாரா விவாதங்களை மேற்கொண்டுள்ளது. 

ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த விவகாரத்தில் ஆண்டு முடிவதற்குள் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று நம்புவதாகக் குறிப்பிட்டார்.

விவசாய சமூகத்தின் அனைத்து நியாயமான கவலைகளையும் தீர்க்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது. அதனால் விவசாயிகள் கவலை கொள்ள வேண்டாம்.

விவசாயத் துறையில் மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்கள் குறித்த தங்கள் நிலைப்பாட்டை எதிர்க்கட்சிகள் மாற்றித் திரித்து அரசியலாக்குகின்றனர் என்றும் கூறினார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக 5 கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், தில்லி எல்லையில் கடும் குளிருக்கு மத்தியில் விவசாயிகள் தொடர்ந்து தங்களது போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டம் நான்காவது வாரத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.