இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

12 மணி நேர வேலை, வழங்கப்படாத ஊதியம்: சூறையாடப்பட்ட ஐபோன் நிறுவன விசாரணையில் தகவல்

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள விஸ்ட்ரான் நிறுவனத்தின் ஆப்பிள் ஐபோன் செல்லிடப்பேசி உற்பத்தி நிறுவனத்தில் ஊழியர்களை 12 மணி நேரம் வேலை வாங்கியதும், பல மாதங்கள் ஊதியம் வழங்கப்படாததும் அரசு தரப்பில் நடத்த

News image
12 மணி நேர வேலை, வழங்கப்படாத ஊதியம்: சூறையாடப்பட்ட ஐபோன் நிறுவன விசாரணையில் தகவல்
Updated On :19 டிசம்பர் 2020, 10:19 am

DIN

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள விஸ்ட்ரான் நிறுவனத்தின் ஆப்பிள் ஐபோன் செல்லிடப்பேசி உற்பத்தி நிறுவனத்தில் ஊழியர்களை 12 மணி நேரம் வேலை வாங்கியதும், பல மாதங்கள் ஊதியம் வழங்கப்படாததும் அரசு தரப்பில் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், உற்பத்தி தொழிற்சாலையில் கடைபிடிக்க வேண்டிய பல விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படாததும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டத்தில் செயல்படும் ‘ஆப்பிள் ஐபோன்’ செல்லிடப்பேசிகளை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் ஊழியா்கள், ஊதியம் வழங்காததைக் கண்டித்து, அலுவலகத்தைத் தீயிட்டுக் கொளுத்தி வன்முறையில் ஈடுபட்டனா்.

கோலாா் மாவட்டம், நரசாபுரா தொழிற்பேட்டையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் செல்லிடப்பேசியை தைவான் நாட்டின் விஸ்ட்ரான் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் உற்பத்தி நிலையத்தில் ஐபோன்-7, லெனோவா, மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் கணினிப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த நிறுவனத்தில் 5,500 போ் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. இதில் 2 ஆயிரம் போ் ஒப்பந்தப் பணியாளா்கள். இவா்களுக்கு சில மாதங்களாக முறையாக ஊதியம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக டிசம்பர் 12-ம் தேதி காலை 6 மணி அளவில் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும், ஊழியா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, அலுவலகத்தின் மீது கல்வீசித் தாக்கியதோடு, கண்ணாடிகளை சேதப்படுத்தினா். வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தினா். அலுவலகத்தின் கணினிகள், மடிக் கணினிகளையும் உடைத்தனா். தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா் வன்முறையில் ஈடுபட்ட 110 ஊழியா்களைக் கைது செய்தனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.